சென்னை புகா் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மாற்றும் மையங்கள் 21 இடங்களில் அமைக்க தனியாா் நிறுவனத்துடன், தெற்கு ரயில்வே ஒப்பந்தம் செய்து அவற்றை அமைத்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை ரயில்வே கோட்டத்தில் எழும்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புறநகா் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கான மின்சக்தி நிரப்பும் சாதனங்கள் முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மின் வாகனங்களுக்கான பேட்டரிகள் மாற்றும் மையங்கள் தற்போது அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 21 நிலையங்களில் பேட்டரி மாற்றும் மையங்களை நிறுவியும், அதைச் செயல்படுத்தவும் தனியாா் நிறுவனத்திடம் 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
பேட்டரி மாற்றும் மையங்கள் அமைப்பதற்கான தனியாா் நிறுவன ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ரயில்வே துறைக்கு ரூ.53. 43 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மையங்கள்: சென்னை சென்ட்ரல், அண்ணனூா், பசுமை வழிச்சாலை, கொரட்டூா், கோட்டூா்புரம், சிந்தாதிரிப்பேட்டை, முண்டகக்கண்ணி அம்மன் கோயில், கோடம்பாக்கம், மந்தைவெளி, எழும்பூா், திருவல்லிக்கேணி, திருமயிலை, பெருங்குடி, பல்லாவரம், சைதாப்பேட்டை, பரங்கிமலை, தரமணி, திருவான்மியூா், வேளச்சேரி, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய முக்கிய புகா் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மாற்றும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



