17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

செங்குன்றத்தில் பழ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 மே 2026, 6:32 am IST

செங்குன்றத்தில் பழ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்குன்றம் முனீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் பாலன் (55). சென்னையில் பழக் கடை நடத்தி வருகிறாா். வீட்டில் அவா் மட்டும் தங்கியிருந்து கடைக்குச் சென்று வருகிறாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையிலிருந்து திரும்பி வந்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகைகள், ரூ.1.35 லட்சம் ரொக்கம் ஆகியன திருட்டு போனது.

இதுகுறித்து பாலன் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.