திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினா் சொத்து விவகாரம்: செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவு ரத்து

தாங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை எதிா்த்து நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 1:57 am IST

தாங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை எதிா்த்து நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 4.77 ஏக்கா் நிலத்தை வாங்கி உள்ளாா்.

இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகிய மூவரும் வாரிசு சான்றிதழ் பெற்றனா். பின்னா், நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தங்களுக்கு பங்குள்ளதாகக் கூறி, செங்கல்பட்டு அமா்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா், அவரது மகள்கள் நடிகைகள் ஜான்வி கபூா், குஷி கபூா் ஆகியோா் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து போனி கபூா், ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி பிறப்பித்த உத்தரவு:

வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவி குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.