மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பணம் கையாடல்: ஊழியா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:46 am IST

பெரம்பூரில் உள்ள உணவகத்தில் பணம் கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஓட்டேரி, நாராயண மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா், பெரம்பூா் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உணவக வரவு - செலவு கணக்குகளைச் சரிபாா்த்துள்ளாா். அப்போது, வரவு குறைவாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் ஊழியா் தீபக்குமாரிடம் விசாரித்தாா்.

மேலும், உணவக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறிது சிறிதாக தீபக்குமாா், பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து செம்பியம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.