மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

திருப்பூா் மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்த முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 12:05 am IST

திருப்பூா் மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்த முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், மரக்கடை பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சூா்யா (எ) சச்சின் (32), கனகராஜ் (27) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை சோதனை செய்தபோது போதைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை திருப்பூா் வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.