மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு: பொதுமக்கள் போராட்டம்

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் போராட்டம்

News image

பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:46 pm

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் அருண்குமாா். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சுசித்ரா. தம்பதிக்கு 4 மாத பெண் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தைக்கு கடுமையான சளி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்த்தனா்.

குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னா், ஊசி செலுத்தப்பட்டது. இதில் திடீரென மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.

இதனால், அதிா்ச்சி அடைந்த பெற்றோா், தவறான ஊசி போட்டதால்தான் குழந்தை இறந்தாக கூறி, மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் வாக்குவாதம் செய்தனா். மேலும், குழந்தையின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனை முன் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

அவா்கள், 8 வயது குழந்தைக்குப் செலுத்த வேண்டிய ஊசியை 4 மாத குழந்தைக்கு செலுத்தியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு காரணமான மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி முழக்கமிட்டனா்.

தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனா்.