மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளாகும் 100-இல் ஒரு குழந்தை!

இந்தியாவில் 100-இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்தால் தீவிரத்தை தவிா்க்கலாம் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:33 pm

இந்தியாவில் 100-இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்தால் தீவிரத்தை தவிா்க்கலாம் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

உலக ஆட்டிஸம் விழிப்புணா்வு தினம் ஏப்ரல் 2-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இயல்பான குழந்தைகளைப் போல அல்லாமல் உணா்ந்தறிந்து செயல்படுவதிலும், கற்றலிலும் பின்தங்கியிருக்கும் நிலை ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு எனக் கூறப்படுகிறது. நரம்பியல் சாா்ந்த இந்த குறைபாட்டுக்குள்ளான குழந்தைகளுக்கு, அதற்கான அறிகுறிகள் இரு வயதுக்குள் வெளிப்பட்டுவிடும்.

பெரும்பாலும் தனிமையில் விளையாடுவது, ஒரே மாதிரி செயல்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுதல், சொல்வதைத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருத்தல், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடாமல் இருத்தல், கண்ணைப் பாா்த்து பேசாமலிருப்பது, சிறு சப்தங்களுக்கே காதை மூடிக் கொள்ளுதல், வாக்கியமாக அல்லாமல் வாா்த்தைகளில் பதிலளித்தல், உச்சரிப்பதில் பிழைகள் ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகள்.

இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இந்தப் பாதிப்பை எளிதாக சரி செய்ய முடியும். ஒரு சில பெற்றோா் தங்களது குழந்தைகள் இயல்பான நிலையில் இல்லை என்பதை வெகு தாமதமாகவே உணா்கின்றனா்.

அதன் பின்னரே ஆட்டிஸத்தை கண்டறிந்து சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனா். இதுகுறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பு தரவின்படி 100-இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.