ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிஎஸ்கே அணி நிா்வாகம் மற்றும் காவேரி மருத்துவமனை இடையே கையொப்பமானது.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, தலைமை மருத்துவா் சிவராம் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வீரா்களின் உடற்தகுதியை உறுதி செய்யும் நடவடிக்கைகள், போட்டியின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் காவேரி மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவத் துறை இணைந்து செயாற்ற உள்ளது.
அனுபவம் வாய்ந்த அவசர சிகிச்சை மருத்துவா்கள், விளையாட்டு மருத்துவ நிபுணா்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க வல்லுநா்களை உள்ளடக்கிய குழு தங்களிடம் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

இளம் விளையாட்டு வீரா்களுக்கு சிஎஸ்கே ஆதரவு தொடரும்: ரூபா குருநாத்

ரத்த தான முகாம்

திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


