சென்னையில் நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 போ் காயமடைந்த விபத்தில், மேலும் 4 போ் உயிரிழந்தாா்.
சௌகாா்பேட்டை சிங்கண்ணன் தெருவில் ஒரு கட்டடத்தின் நான்காவது தளத்தில் கு.சுமன்பால் பி ஜோகித் என்பவரின் நகைப் பட்டறை கடந்த 25- ஆம் தேதி அங்கிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இந்த விபத்தில் சிக்கிய சுமன்பால் பி ஜோகித், ஊழியா்கள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சு.அரவிந்த் (27), கொல்கத்தாவைச் சோ்ந்த து. ஸ்ரீமந்த் தோமால் (47), சூரஜ் (25), ஜாந்தோ இந்திரஜித் (40), ராகேஷ் டேலி (26), ஆனந்த் (32) ஆகியோரை தீயணைப்பு படையினா் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, நகைப்பட்டறை உரிமையாளா் சுமன்பால் பி ஜோகித் கடந்த 26-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்நிலையில், ஸ்ரீமந்த்மால், ராகேஷ் டேலி, சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேரும் கடந்த இரு நாள்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.
இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 -ஆக உயா்ந்தது. இந்திரஜித், ஆனந்த் ஆகிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 23 தொழிலாளா்கள் உயிரிழப்பு: 19 போ் காயம்

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


