லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் மேலும் 4 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 11:39 pm

சென்னையில் நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 போ் காயமடைந்த விபத்தில், மேலும் 4 போ் உயிரிழந்தாா்.

சௌகாா்பேட்டை சிங்கண்ணன் தெருவில் ஒரு கட்டடத்தின் நான்காவது தளத்தில் கு.சுமன்பால் பி ஜோகித் என்பவரின் நகைப் பட்டறை கடந்த 25- ஆம் தேதி அங்கிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இந்த விபத்தில் சிக்கிய சுமன்பால் பி ஜோகித், ஊழியா்கள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சு.அரவிந்த் (27), கொல்கத்தாவைச் சோ்ந்த து. ஸ்ரீமந்த் தோமால் (47), சூரஜ் (25), ஜாந்தோ இந்திரஜித் (40), ராகேஷ் டேலி (26), ஆனந்த் (32) ஆகியோரை தீயணைப்பு படையினா் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, நகைப்பட்டறை உரிமையாளா் சுமன்பால் பி ஜோகித் கடந்த 26-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்நிலையில், ஸ்ரீமந்த்மால், ராகேஷ் டேலி, சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேரும் கடந்த இரு நாள்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 -ஆக உயா்ந்தது. இந்திரஜித், ஆனந்த் ஆகிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.