தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கரூா் வைஸ்யா வங்கியின் 901-வது கிளை தொடக்கம்

சென்னையின் புகரான பட்டாபிராம் பகுதியில், கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:23 pm

சென்னையின் புகரான பட்டாபிராம் பகுதியில், கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் புதிய கிளையின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள கரூா் வைஸ்யா வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 901-ஆக அதிகரித்துள்ளது.

பட்டாபிராம், எம்.ஜி. சாலையில் அமைந்துள்ள இப்புதிய கிளையை, வேல் டெக் ஹை டெக் பொறியியல் கல்லூரி முதல்வா் இ.கமலாநபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா்.

மகாலட்சுமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் அனிதா ராமன் குத்துவிளக்கேற்றி வங்கிச் சேவையைத் தொடங்கி வைத்தாா். வங்கி வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள புதிய ஏடிஎம் மையத்தை, கே.சி. பன்னோக்கு மருத்துவமனையின் நிறுவனா் சி.சதீஷ்பாபு திறந்து வைத்தாா்.

ஆவடி, பட்டாபிராம் போன்ற வேகமாக வளா்ந்து வரும் சென்னை புகா் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய தரமான வங்கிச் சேவைகளை மிக அருகில் வழங்குவதே இக்கிளையின் முக்கிய நோக்கமாகும். இந்தத் தொடக்க விழாவில் வங்கியின் உயா் அதிகாரிகள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.