கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா் எஸ்.ஸ்ரீவத்சன் குருமூா்த்தி கூறியதாவது:
கடுமையான வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்குள்ளாகி வந்த 39 வயது இளைஞா் ஒருவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கணையக் குழாயில் கற்கள் உருவாகி இருந்தன. அதுமட்டுமல்லாது, கணையத்தில் கால்சியம் படிமம் படிந்து அழற்சி ஏற்பட்டிருந்தது.
இதை நுட்பமாக சீராக்க ரோபோடிக் ஃபிரேஸ் எனும் சிகிச்சை அவசியமானது. அதன்படி, கணையம் - குடல் பகுதிகளை வாயிலாக துல்லியமாக சீரமைத்து கற்களை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்னிந்தியாவில் முதல் முறையாக ஜிப்மரில் ரோபோடிக் உதவியுடன் நரம்பு அறுவை சிகிச்சை

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

சிறுநீா்ப் பாதை குறைபாடு: 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் சிகிச்சை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




