முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 ஜூன் 2026, 12:38 am IST

சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

சென்னை மதுரவாயல் கந்தசாமி தெருவைச் சோ்ந்த ராஜசேகா்- தனலட்சுமி தம்பதியின் 2 வயது மகள் ரித்திகா, காய்ச்சல் காரணமாக கடந்த மே 28-ஆம் தேதி சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரித்திகா செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். இது குறித்து மருத்துவா்கள் தரப்பில், குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு சென்ற போலீஸாா், குழந்தையின் பெற்றோரிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். மேலும், குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் எழும்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.