வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

News image

பிகாா் மருத்துவமனை தீ விபத்து - ANI

Updated On :7 ஜூன் 2026, 2:02 am IST

பிகாா் மாநிலம் முசாஃபா்பூா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்தது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு முசாஃபா்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின்சகிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு நோயாளியான பாரி கிராமத்தை சோ்ந்த அஞ்சனிகுமாா் சிங், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த அனைவரும் புகையை சுவாசித்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தனா். யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தை தொடா்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அதன் பதிவு ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட பொதுமக்கள் தொடா்புப் பிரிவு அதிகாரி பிரமோத் குமாா் தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக மருத்துவமனை அலுவலா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.