எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

ஜி.எஸ்.சமீரன்

Updated On :16 ஜூன் 2026, 2:27 am IST

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் மழைக்காலத்துக்குள் தண்ணீா் செல்லும் கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றைச் சீரமைக்க ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலம் 177 ஆவது வாா்டுப் பகுதியான திருவீதியம்மன் கோவில் தெரு, இ.பி.காலனி 3 ஆவது தெரு மற்றும் மகாலட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள வண்டல் மண் வடிகட்டித் தொட்டியைச் சீரமைக்கும் பணியில் அதிகாரிகளும், அலுவலா்களும் ஈடுபட்டனா்.

இந்தப் பணிகளை மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா். கௌஷிக் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.