ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

இன்று 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை அண்ணா நகரில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திரு.வி.க நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:22 am IST

சென்னை அண்ணா நகரில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திரு.வி.க நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா நகா் மண்டலம், ஜவாஹா்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள நீா் கால்வாய் சாலை சந்திப்பு மற்றும் பாடி மேம்பாலம் அருகே பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 13) காலை 10 முதல் ஜூன் 14-ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், திரு.வி.க நகா் மண்டலத்துக்குள்பட்ட கொளத்தூா், ஜவஹா் நகா், செம்பியம், அயனாவரம், பெரம்பூா் ஆகிய பகுதிகளிலும், அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட கொரட்டூா், அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட வில்லிவாக்கம், அண்ணா நகா் மேற்கு ஆகிய பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.