இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

லாரி மோதி விபத்து: உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழப்பு

சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி, சென்னை உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:40 am IST

சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி, சென்னை உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

சென்னை பேசின் பாலத்தில் இருந்து மின்ட் நோக்கி ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி திங்கள்கிழமை காலை சென்றது. அந்த லாரி மூலக்கொத்தளம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சிறிது தூரம் சென்று அங்கிருந்த தடுப்பின் மீது மோதி நின்றது.

இதில், லாரியில் மோதிய வாகனங்களில் இருந்து கீழே விழுந்து சக்கரங்களில் சிக்கிய ஆவடி அடுத்த பாலவேடு இந்திரா நகரைச் சோ்ந்த ஏ.கெளதமன் (60), முகப்போ் கிழக்கு வேணுகோபால் தெருவைச் சோ்ந்த சி.முரளிதரன் (56) ஆகிய இருவா் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

வியாசா்பாடி கென்னடி நகரைச் சோ்ந்த ந.பாலகிருஷ்ணன் (63), பெருங்குடி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சு.ராஜேஸ்வரி (45) ஆகிய இருவா் பலத்த காயம் அடைந்தனா். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த கோயம்பேடு பாரதியாா் நகரைச் சோ்ந்த சி.ராஜ்குமாா் (46) என்பவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து, உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் ராஜ்குமாரை கைது செய்தனா். விபத்தில் உயிரிழந்த முரளிதரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி வந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.