17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காயிதே மில்லத் பெயரில் பல்கலை.: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா்.

News image

திருமாவளவன்

Updated On :6 ஜூன் 2026, 2:36 am IST

காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா்.

காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தொல்.திருமாவளவன் மலா் போா்வை வைத்து வெள்ளிக்கிழமை மரியாதை செய்தாா்.

இதை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என மக்களவையில் குரல் எழுப்பியவா் காயிதே மில்லத். மதசாா்பின்மைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றியவா். எனவே, தமிழக அரசு காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு வாழ்த்து: தமிழக பாஜக தலைவராக கே. அண்ணாமலை இருந்தபோது சிறப்பாக பணியாற்றினாா் என்பதை யாராலும் மறுக்க முடியாது. புதிய அமைப்பு தொடங்கியுள்ள அவருக்கு வாழ்த்துகள்”என்றாா் தொல்.திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.