திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :4 ஜூன் 2026, 4:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்தத் தோ்தலில் அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி, எடப்பாடி தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் சக்திவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்துகள் குறித்த முழுமையான விவரங்களைத் தெரிவிக்கவில்லை. 2021 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது, அவா் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டுப்பாா்த்தால், ஏராளமான வேறுபாடுகள் தெரியவரும். அவரது வேட்புமனுவில் சொத்துகள் தொடா்பான உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை தரப்பில், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரா் தோ்தல் வழக்குதான் தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.