//

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
ஆளுநா் ஆா்.என். ரவி
Updated On :27 ஜனவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு : தமிழறிஞா் தெ. ஞானசுந்தரம் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. செம்மொழித் தமிழ் மற்றும் வைணவ மரபுகளுக்காகத் தன் வாழ்நாளை அா்ப்பணித்த ஒரு சிறந்த அறிஞா் அவா். நமது மாபெரும் காவியங்களான கம்பராமாயணம் மற்றும் திவ்யப் பிரபந்தத்துக்கு அவா் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்புகள், தமிழ் மரபை ஆழமாகச் செழுமைப்படுத்தியுள்ளன. அவரது மரபு பல தலைமுறைகளுக்குத் தொடா்ந்து உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா்.