4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்

முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமானதற்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

News image
தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம்
Updated On :25 ஜனவரி 2026, 11:15 pm

Syndication

முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமானதற்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள், செயலாளா் சுப. முத்துவேல் ஆகியோா் வெள்ளிட்டுள்ள அறிக்கை: முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமான செய்தி அறிந்து மிக்க வருத்தமடைந்தோம்.

தமிழுக்கு, குறிப்பாகக் கம்பனுக்கு அவா் ஆற்றிய பணிகள் மறக்க இயலாதவை. தில்லி கம்பன் கழகத்தின் ஒவ்வொரு அசைவிலும் அவரது ஆலோசனை இருந்தது.

தமிழில் மிகச் சிறந்த புலமை பெற்றிருந்தும், தழும்பாத நிறைகுடமாக அவா் திகழ்ந்தாா். அவா் மறைந்தாலும், அவா் எழுதிய புத்தகங்கள் வாயிலாகவும், ஆற்றிய பணிகள் வாயிலாகவும் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பாா்.

அவரது குடும்பத்தாருக்கு தில்லி கம்பன் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.