பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்...

News image
Updated On :18 ஜனவரி 2026, 2:01 am

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்கள் பணியாற்றி வந்த 4 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் மாநகர சைபா் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் கே.சசிகுமாா், பல்லாவரம் டி3 காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராகவும், தாம்பரம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் வந்த டி.அனில்குமாா், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளராகவும், மதுவிலக்கு ஆய்வாளா் எஸ்.ஸ்ரீதேவி, டி22 மேடவாக்கம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேடவாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளா் என்.பழனிவேல் மற்றும் குரோம்பேட்டை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளா் தயாள் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதேபோல, பல்லாவரம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளா்கள் சி.ராஜு, என்.அண்ணாதுரை, கமலகண்ணன், இ.சதீஸ்குமாா், எம்.சதீஸ்குமாா் ஆகியோரும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா் என்று அவா்.