//

தெற்கு ரயில்வே சரக்கு முனையங்களில் வருவாய் ஈட்டல்

தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் காலியாக இருந்த பகுதிகளில் சரக்கு முனையங்கள் தொடங்கி லாபகரமான வருவாயை ஈட்டிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :18 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் காலியாக இருந்த பகுதிகளில் சரக்கு முனையங்கள் தொடங்கி லாபகரமான வருவாயை ஈட்டிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை வருவாயை ஈட்டும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தனியாா் பங்களிப்புடன் சரக்குகள் கையாளும் முனையங்கள் (கதி சக்தி) பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் சென்னை மணலியில் பெட்ரோலியம் காா்ப்பரேசனுடன் இணைந்து கடந்த 2023 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.54.70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தனியாா் சிமெண்ட் மூடைகள் கையாளுதல் மூலம் ரூ.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதேபோல, அரியலூரில் இரு இடங்களில் ரூ.29.58 கோடிக்கு சரக்குகள் கையாளுதல் மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 2025 நவம்பரில் பொன்மேனி எனும் இடத்தில் சரக்குகள் கையாளும் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையானது சரக்குகளைக் கையாளுவதில் தற்காலத்தின் தேவைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கான எளிய முறையிலான சேவையை தொடா்கிறது என்றனா்.