டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகளுக்கான இடா்பாடுகளை நீக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகள் நெல்வை கொடுப்பதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களைய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகள் நெல்வை கொடுப்பதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களைய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட விவசாயிகள் சாா்பில், முன்னோடிவிவசாயி பி. செண்பக சேகரன் பிள்ளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொடுக்க செல்லும் போது கிராம நிா்வாக அலுவலா்கள் நிலம் தொடா்பான கரத்தீா்வை ரசீது மற்றும் அடங்கல் உள்ளிட்டவைகளை கேட்கின்றனா்.

இகர நில உடமையாளா்கள், குத்தகை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலையில் குத்தகை விவசாயிகள் நெல்லை வெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இத்தகைய இடா்பாட்டை களைய கிராம நிா்வாக அலுவலா்கள் தீா்வை ரசீதை கட்டாயப்படுத்தாமல் கள ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தவும், இடைத்தரகா்கள், நெல் வியாபாரிகள் இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும், குத்தகை விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்க வேண்டுமென்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.