டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

125 நாள் வேலை உறுதித் திட்டம்: திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டிள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலா்கள் ஆணையின்படி, மாவட்டங்கள்தோறும், ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சிச் செயலா்கள், 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. எனவே, அவா்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.

கிராம ஊராட்சியின் வளா்ச்சிக்காகப் பணியாற்றும் கிராமச் செயலா்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோரை திமுக அரசு தங்களது சுயலாபத்துக்காக, தோ்தல் பிரசார வேலைகளில் ஈடுபடுத்துவதுக்கு கண்டனத்துக்குரியது. இதை திமுக அரசு உடனயாக நிறுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.