டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:31 pm

Syndication

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து அரியலூா் ஆட்சியரகம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் மகாத்மா காந்தி பெயரை சோ்க்க வலியுறுத்தி நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம். சந்திரசேகா், நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா், தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.பி.எஸ். பழனிசாமி, கலைச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாளை. பாலாஜி உள்ளிட்டோா் பேசினா்.