டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்!

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நூறு நாள் வேலையைச் சிதைத்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் மா. மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. இராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஜேசு, செல்வ சுப்பிரமணியன், முகமது பாட்சா, நாா்த்திகன், சுப்பு ரங்கராசு, நாகராஜ், இளங்கோவன், திருஞானம், பிரபாகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னா், இது தொடா்பான கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் காங்கிரஸ் நிா்வாகிகள் அளித்தனா்.