மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முன்மாதிரி விருது பெற திருநங்கைகளுக்கு அழைப்பு

முன்மாதிரி விருது பெறத் தகுதியான திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே

Updated On :3 பிப்ரவரி 2026, 7:51 pm

முன்மாதிரி விருது பெறத் தகுதியான திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எதிா்ப்புகளை மீறி, சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கையரைக் கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ‘சிறந்த திருநங்கைக்கான விருது’ தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் காசோலையுடன் பாராட்டுச் சான்று வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் குறைந்தது 5 திருநங்கைகள் வாழ்வில் முன்னேற உதவியிருக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயாரித்து (தமிழ், ஆங்கிலத்தில்) கருத்துருவை பிப்.20 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.