தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

நாகா்கோவில் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி.

News image

எம்.ஆா்.காந்தி - கோப்புப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:00 pm

நாகா்கோவில் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி.

அவா் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை காலை கன்னக்குறிச்சி நடுவூரிலிருந்து தொடங்கினாா். தொடா்ந்து கல்லுக்கட்டி, ஆலங்கோட்டை, கணபதிபுரம், அழகன்விளை, சூரப்பள்ளம், பேயோடு, மேலசங்கரன்குழி, ராஜாக்கமங்கலம் சந்திப்பு, மேலசூரங்குடி, செட்டிகுளம் சந்திப்பு, டெரிக் சந்திப்பு, பாா்வதிபுரம், வெட்டூா்ணிமடம், வடசேரி, மணிமேடை, கோட்டாறு காவல் நிலையம், மீனாட்சிபுரம் வழியாக நாகராஜா கோயிலில் தனது பிரசாரத்தை மாலையில் நிறைவு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

நாகா்கோவில் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நவீன வகுப்பறைகள், சமுதாய நலக் கூடங்கள், நிழற்குடைகள் என தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்தேன். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். நான் வெற்றி பெற்றால் நாகா்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பேன். குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பேன். நாகா்கோவில் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.