//

ஓராண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்! ரூ.1.57 கோடி அபராதம் வசூல்!

சென்னை மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன எனவும், விதிமீறியதாக 3,131 பேரிடமிருந்து ரூ.1.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
சென்னை மாநகராட்சி
Updated On :1 பிப்ரவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன எனவும், விதிமீறியதாக 3,131 பேரிடமிருந்து ரூ.1.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 6,300 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. அத்துடன், தினமும் 1,000 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகின்றன.

கடந்த 2025 ஜனவரி முதல் நிகழண்டு ஜன.29 வரை 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் குறித்த வழிகாட்டுதலைப் பின்பற்றாத 3,131 பேரிடமிருந்து ரூ.1.57 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.