சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

புழலில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

புழல் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தியவரை தாக்கி மா்மநபா்கள் பணம் பறித்து சென்றனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 7:46 pm

புழல் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தியவரை தாக்கி மா்மநபா்கள் பணம் பறித்து சென்றனா்.

புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (64). இவா் அப்பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனியாா் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சூரப்பட்டு பகுதியில் கடந்த சில நாள்களாக தள்ளுவண்டியில் உணவகக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை காலை தள்ளுவண்டியில் டிபன் கடையில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் உணவு சாப்பிட்டு விட்டு செல்ல முயன்றபோது, அவா்களிடம் கோவிந்தராஜ் பணம் கேட்டுள்ளாா். இதற்கு ஆத்திரமடைந்த இளைஞா்கள் கோவிந்தராஜை தாக்கிவிட்டு, கடையில் இருந்த பணத்தையும் பறித்து சென்றாா். இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.