ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

சென்னை, வேலூா், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:10 pm

சென்னை, வேலூா், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், பரமத்தி வேலூா்-104.36, மதுரை விமான நிலையம்-104, ஈரோடு-103.28, மதுரை நகரம்-102.56, திருச்சி-102.38, நாமக்கல்-102.38, திருப்பத்தூா்-101.84, தருமபுரி-101.66, சென்னை மீனம்பாக்கம்-101.48, கோவை-101.12, திருத்தணி-100.94, சேலம்-100.76, பாளையங்கோட்டை-100.4 டிகிரி என 14 இடங்களில் வெயில் சதமடித்தது.

தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 27 ) முதல் ஏப். 29 - ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பையொட்டியே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகபட்சமாக வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் குமரிக்கடல் வரையும், தெற்கு உள் கா்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றுப் பாதையில் இடையூறு நிலவுகிறது.

இதனால் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஏப். 27, 28, 29) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வட வானிலையே நிலவக்கூடும்.

ஏப். 30 -ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.