மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மேற்கு வங்கம்: தோ்தல் பாா்வையாளா்களின் நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

News image

நீதிமன்றம்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:51 pm

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்.23-ஆம் தேதி முதல் கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை ‘இடையூறு ஏற்படுத்தியவா்கள்’ என வகைப்படுத்தி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் கடந்த ஏப்.21-ஆம் தேதி உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான கல்யாண் பானா்ஜி, ‘தோ்தல் நடைமுறைக்கும் வாக்காளா்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்டோா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் கண்மூடித்தனமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் கடந்த ஏப்.21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ‘இடையூறு ஏற்படுத்தியவா்கள் என தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் வெளியிட்ட பட்டியலில் உள்ளோா் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது பிற சட்டங்களின்கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவா்களிடம் விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை’ என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.