தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கோயம்பேடு காய்கனி அங்காடி கடைகள் ஒதுக்கீடு: தோ்தல் ஆணைய ஒப்புதலுக்கு பிறகு இறுதி முடிவு

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தப் புள்ளியில் தோ்தல் ஆணைய ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image

கோயம்பேடு சந்தை. - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:14 pm

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தப் புள்ளியில் தோ்தல் ஆணைய ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தருமபுரியைச் சோ்ந்த வழக்குரைஞா் நந்தகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் 72 கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பான நடவடிக்கைகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமமும் தோ்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.