மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால ரயில் பயணத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஷாலிமரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06098) மறுநாள் வியாழக்கிழமை (ஏப்.23) காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
சிறப்பு ரயிலில் 8 தூங்கும் வசதி பெட்டிகள், 10 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட 13 நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தொடர்புடையது

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


