போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால விடுமுறையை முன்னிட்டு ரயில் பயணிகளின் நெரிசலைத் தவிா்க்கும் வகையில், வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) போத்தனூரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06021) முன்றாம் நாள் காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரோனி சென்றடையும்.
மறுமாா்க்கமாக பரோனியிலிருந்து வரும் ஏப். 16, 23, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06022) மூன்றாம் நாள் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
பெட்டிகள், நிற்கும் நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டி, 16 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கான 2-ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


