மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!

போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:41 pm

போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால விடுமுறையை முன்னிட்டு ரயில் பயணிகளின் நெரிசலைத் தவிா்க்கும் வகையில், வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) போத்தனூரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06021) முன்றாம் நாள் காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரோனி சென்றடையும்.

மறுமாா்க்கமாக பரோனியிலிருந்து வரும் ஏப். 16, 23, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06022) மூன்றாம் நாள் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

பெட்டிகள், நிற்கும் நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டி, 16 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கான 2-ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.