மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

சென்னை- திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:17 pm

சென்னை- திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலியிலிருந்து வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06070) மறுநாள் 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வரும் 17, 24, மே 1 தேதிகளில் பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06069) மறுநாள் ஏப்ரல் 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: திருநெல்வேலியிலிருந்து வரும் 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06166) மறுநாள் 13, 20, 27 ஆகிய தேதிகளில் பகல் 11.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கத்தில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06165) மறுநாள் 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

பெட்டிகள், நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டி, 6 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதி பொருளாதார வசதிப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டி மற்றும் சரக்கு வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.