கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு 13 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். போத்தனூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம் பரெளனி ரயில் நிலையத்தை அடையும்.
மறுமாா்க்கத்தில், பரெளனியில் இருந்து வரும் 16 ஆம் தேதி 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். பரெளனியில் இருந்து 16 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக சனிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


