மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 6:24 pm

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு 13 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். போத்தனூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம் பரெளனி ரயில் நிலையத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், பரெளனியில் இருந்து வரும் 16 ஆம் தேதி 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். பரெளனியில் இருந்து 16 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக சனிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.