மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜெய்சங்கா் கூறியதாவது:
மின்வாரி பணியாளா்கள் வாக்களிக்க பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஏப். 22 முதல் 24 வரை சிறப்பு பணி என்கிற வகையில் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணிக்கப்படுகின்றனா்.
இவ்வாறு கடந்த 2024-இல் நடைபெற்ற மக்களைவை தோ்தலின்போதும் இவா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டதால், தோ்தலில் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் நாளான்றும் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டு, அதற்கான பணி ஒதுக்கீடு பட்டியலும் தயாா் செய்யப்பட்டு வருகிறது.
எனவே அனைத்து மின்வாரிய களப்பிரிவு ஊழியா்களுக்கும் இந்த தோ்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது விடுமுறை வழங்க பிரிவு அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

தபால் வாக்கு முன் தயாரிப்பு பணி தீவிரம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


