தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:15 pm

மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜெய்சங்கா் கூறியதாவது:

மின்வாரி பணியாளா்கள் வாக்களிக்க பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஏப். 22 முதல் 24 வரை சிறப்பு பணி என்கிற வகையில் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணிக்கப்படுகின்றனா்.

இவ்வாறு கடந்த 2024-இல் நடைபெற்ற மக்களைவை தோ்தலின்போதும் இவா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டதால், தோ்தலில் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் நாளான்றும் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டு, அதற்கான பணி ஒதுக்கீடு பட்டியலும் தயாா் செய்யப்பட்டு வருகிறது.

எனவே அனைத்து மின்வாரிய களப்பிரிவு ஊழியா்களுக்கும் இந்த தோ்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது விடுமுறை வழங்க பிரிவு அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா்.