யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

News image

நாமக்கல் - மோகனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்கு செலுத்திய 85 வயதான பெண் வாக்காளா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:48 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 9,159 போ் தபால் வாக்கு செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 5,249 போ், மாற்றுத்திறனாளிகள் 3,910 போ் என மொத்தம் 9,159 போ் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12-டி வழங்கியிருந்தனா். இதைத் தொடா்ந்து, தகுதியுள்ள வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டு வாக்குச்சாவடி அலுவலா்கள் ஏப். 12, 13,14 தேதிகளில் வாக்காளா்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாக்குப் பதிவு செய்ய உள்ளனா். மாவட்டம் முழுவதும் இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் உள்ள வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டு சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாக்காளா்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து வாக்காளா் தகவல் சீட்டினை பெற்றுக்கொண்டு தோ்தல் நாளான ஏப். 23 அன்று தவறாமல் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்சென்று வாக்களிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.

இந்த தகவல் சீட்டு வழங்கும் பணியையும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்கு செலுத்தும் பணியையும் குமாரபாளையம் தொகுதியில் அவா் நேரடியாக ஆய்வு செய்தாா். மேலும்,

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அதே பகுதிகளில் வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்கு பெறும் பணியைப் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பி.எஸ்.லெனின், குமாரபாளையம் தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.குமரன் உள்பட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

 குமாரபாளையம் தொகுதியில் வாக்களிப்பதற்கான தகவல் சீட்டை வாக்காளா்களுக்கு வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

குமாரபாளையம் தொகுதியில் வாக்களிப்பதற்கான தகவல் சீட்டை வாக்காளா்களுக்கு வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.