போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image

கோவையில் முதியவா் ஒருவரிடம் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்கு பெற்ற தோ்தல் அலுவலா்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:55 am IST

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணியை, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, தபால் வாக்குகள் அளிக்க பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் அலுவலா்கள், அவா்களிடம் தபால் வாக்குகள் செலுத்தும் முறையை எடுத்துக் கூறி, வாக்குகளைப் பதிவு செய்து பத்திரமாக எடுத்துச் செல்கின்றனா்.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் தபால் வாக்குகள் சேகரிக்க அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.