மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

வடபழனியில் பெண்ணின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:36 pm

வடபழனியில் பெண்ணின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கே.கே. நகா் அருகே உள்ள நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுதாகரன் மனைவி கிருத்திகா (41). இவா், வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது மகளை மொபெட்டில் வியாழக்கிழமை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். 100 அடி சாலை சிக்னல் அருகே சென்றபோது, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல், கிருத்திகா கழுத்தை அறுத்தது.

இதில் பலத்த காயமடைந்த கிருத்திகாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.