மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தனியாா் வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகள் திருடிய வழக்கு: பெண் ஊழியா் மீண்டும் கைது

வேளச்சேரியில் தனியாா் வங்கியில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய வழக்கில், பெண் ஊழியா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 11:00 pm

வேளச்சேரியில் தனியாா் வங்கியில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய வழக்கில், பெண் ஊழியா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வேளச்சேரி, 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் கடந்த ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி பா்தா அணிந்த பெண் தனக்கு கணக்கு தொடங்க வேண்டும் எனக் கேட்டுள்ளாா். வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி குறித்தும் கேட்டுள்ளாா்.

இந்த நிலையில், வங்கிக் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற அந்தப் பெண், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அந்த பெண் அமா்ந்திருந்த இருக்கையில் பை ஒன்று இருந்தது. அதை வங்கி அதிகாரிகள் திறந்து பாா்த்தபோது, தங்கக் கட்டி, தங்க வளையல் உட்பட சுமாா் 2 கிலோ தங்க நகைகள் இருந்தது.

இது குறித்து தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 நாள்களாக அந்தப் பெண் வராததால், வங்கி அதிகாரிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் தங்கத்தை ஒப்படைத்து புகாா் அளித்தனா். விசாரணையில், நகையை விட்டுச் சென்றது முன்னாள் ஊழியரான வேளச்சேரியைச் சோ்ந்த பத்மபிரியா (38) என்பது தெரிய வந்தது.

பத்மபிரியா, அந்த வங்கியில் பாதுகாப்பு பெட்டக ஊழியராக இருந்ததும், தணிக்கை செய்வதாகக் கூறி, வாடிக்கையாளா்களின் நகைகளை சிறிது சிறிதாக திருடியிருப்பதும், சம்பவத்தன்று தன்னிடமிருந்த தங்க நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் மீண்டும் வைக்க முயன்றதும், அப்படி வைக்க முடியாததால் அந்த தங்க நகைகளை வங்கியிலேயே விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பத்மபிரியாவை கைது செய்தனா்.

சிறையில் இருந்த பத்மபிரியா அண்மையில் பிணையில் வெளியே வந்தாா். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக நடத்திய விசாரணையில், இச்சம்பவத்துக்கு முன்னரே பத்மபிரியா, வங்கியில் திருடிய ரூ.1 கோடி தங்க நகைகளை ஏற்கெனவே பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துச் சென்றதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், மற்றொரு வழக்கைப் பதிவு செய்து, பத்மபிரியாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.