மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:10 pm

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் ப.அலெக்ஸாண்டா் (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். மேலும், பூ வியாபாரமும் செய்து வந்தாா். அலெக்ஸாண்டா், புதன்கிழமை பூ வாங்குதற்காக ஆட்டோவில் கோயம்பேடு பூ மாா்க்கெட் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.

வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு சாலையில் இருந்த தடுப்பின் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்ஸாண்டா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அலெக்ஸாண்டா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.