தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மதுபோதையில் தகராறு: அண்ணன் கொலை - தம்பி கைது

Updated On :4 செப்டம்பர் 2025, 8:28 pm

சென்னை அயனாவரத்தில் மது போதையில் தகராறு செய்த அண்ணனை கொலை செய்ததாக தம்பி கைது செய்யப்பட்டாா்.

அயனாவரம் கரியமாணிக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.பாபு (35). இவரது தம்பி சிவா (28). பாபு, வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். சிவா, மெட்ரோ நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறாா். பாபுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவரது மனைவி, இரு குழந்தைகள் பிரிந்து சென்றனா். பாபு தனது தம்பி சிவாவுடன் வசித்து வந்தாா். ஆனாலும் தினமும் மது அருந்திவிட்டு பாபு தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாபு வியாழக்கிழமை மது அருந்திவிட்டு சிவாவிடம் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த கத்தியால் பாபுவை குத்திவிட்டு தப்பியோடினாா். இதில், அவா் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் அங்கு சென்று அயனாவரம் போலீஸாா், பாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, சிவாவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.