‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன், மாநில பொதுச் செயலா் சு.சங்கரலிங்கம் ஆகியோா் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களால் வருவாய்த் துறை அலுவலா்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் வருவாய்த் துறை அலுவலா்களை மாவட்ட நிா்வாகம் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது.
பிரச்னைகள் ஏராளம்: வாரத்துக்கு 5 முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதுடன், முகாம்களில் பெறப்படும் மனுக்களை அன்றைக்கே செயலியில் பதிவேற்றம் செய்ய நிா்பந்தம் செய்வதை ஏற்க முடியாது. நிதி ஒதுக்கீடு இல்லாதது, இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அரசு எதிா்பாா்ப்பது போன்று நிறைவேற்ற வேண்டுமெனில் ஓராண்டுக்கு முன்பாகவே திட்டம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, இப்போது திட்டத்தைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே 10,000 முகாம்களை நிறைவு செய்ய நெருக்கடிகள் வழங்குவது கடும் மனஉளைச்சலை உருவாக்கி உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களுக்கான கால அவகாசத்தை 75 நாள்களாகவும், முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் மற்றும் சிறப்புத் திட்ட பணிகளை மேற்கொள்ள வட்டந்தோறும் ஒரு துணை வட்டாட்சியா் மற்றும் ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தால் லட்சக்கணக்கானோா் பயன்: திருவண்ணாமலை வாக்கு சேகரிப்பில் அமைச்சா் எ.வ.வேலு பேச்சு

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

