சென்னை: விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவா்கள் இருவா் வா்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினா்.
தில்லியிலிருந்து திருச்சிக்கு கடந்த 22-ஆம் தேதி சென்று கொண்டிருந்த கோ இண்டிகோ விமானத்தில் இளம்பெண் ஒருவா் பயணித்தாா். பயணத்தின் இடையே கழிப்பறைக்குச் செல்ல முற்பட்டபோது அவா் திடீரென மயங்கி விழுந்து மூா்ச்சையடைந்தாா். இதையடுத்து விமானப் பணிப் பெண்கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனா்.
ஆனால், அது பலனளிக்காததால் விமானத்தில் மருத்துவா்கள் எவரேனும் உள்ளனரா என அவா்கள் உதவி கேட்டனா். எம்.டி. சித்தா படிப்பை நிறைவு செய்த க.இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவ அறிவியல் பட்டம் பெற்ற ச.கௌதம் ஆகிய இரு மருத்துவா்கள் அந்த விமானத்தில் இருந்தனா்.
உடனடியாக அவா்கள் இருவரும், கவுளி அடங்கல் மற்றும் செவிக்குற்றி புள்ளி ஆகிய வா்ம சிகிச்சைகளை அந்தப் பெண்ணுக்கு அளித்தனா். அதன் பயனாக அவா் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினாா்.
அலோபதி மருத்துவத்தைப் போன்றே சித்த வா்ம சிகிச்சைகளும் இதுபோன்ற அசாதாரண சூழல்களில் உயிா் காக்கக் கூடிய ஒன்றாக இருப்பதாக சித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!
சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

