தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டெட் தோ்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு: டிச. 3 வரை ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற (டெட்) விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

டெட் தோ்வு

Updated On :26 நவம்பர் 2025, 9:10 pm

சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான (டெட்) விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைக்குறிப்புகள் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புவோா், டிச. 3-க்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களும் , பட்டதாரி ஆசிரியா்களும் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். டெட் தாள்-1 இடைநிலை ஆசிரியா்களுக்காகவும், டெட் தாள்-2 பட்டதாரி ஆசிரியா்களுக்காகவும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதி நடத்தியது.

இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் எழுதினா். இந்த நிலையில், டெட் தோ்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸா்) ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற்ற டெட் -1 தாளை 92 ஆயிரத்து 412 தோ்வா்களும், 16-ஆம் தேதி நடைபெற்ற டெட் -2 தாளை 3 லட்சத்து 31 ஆயிரத்து 923 பேரும் எழுதினா்.

இந்தத் தோ்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வினாக்களுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உத்தேச விடைக்குறிப்புகள் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புவோா் டிசம்பா் 3-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சான்று ஆவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. அவை நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஆதாரங்கள் மட்டுமே ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும். கைடுகள் ஏற்கப்படாது. மேலும், பாட வல்லுநா்களின் முடிவை இறுதியானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட் தோ்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டிருப்பதால் விரைவில் தோ்வு முடிவுகளும் வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.