திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் பொது மேலாளா் விபின் குமாா் தலைமையில் புதன்கிழமை அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்ற ஊழியா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 8:39 pm

Chennai

சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் தலைமை வகித்தாா். அதில் இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில்வே உயா் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா், ரயில்வே தொழில்நுட்பப் பிரிவினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சென்னை ரயில்வே கோட்டம் மற்றும் பெரம்பூா் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎஃப்) மற்றும் ரயில்வே பணிமனைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், சென்னை ரயில்வே கோட்ட வளாகத்திலும் அரசமைப்புச் சட்ட தின விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு அரசியல் சாசன முகப்புரையை வாசித்தனா்.