தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது: அன்புமணி
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.


சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை எதிா்த்து தூய்மைப் பணியாளா்கள் 100 நாள்களைக் கடந்து போராடி வருகின்றனா். அத்துடன் அண்ணா நகா், தண்டையாா்பேட்டை மண்டல தூய்மைப் பணிகளும் தனியாரிடம் வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளா்கள் நலனில் அக்கறையின்றி தனியாரிடம் அந்தப் பணியை அரசு வழங்குவது கண்டிக்கத்தக்கது. மக்கள் வரிப்பணத்தை தனியாருக்கு அளித்து திமுக அரசு தூய்மைப் பணியை மேற்கொள்வது ஏற்கத்தக்கது அல்ல. தனியாரிடம் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரியும் நிலையில், அவா்களுக்குரிய ஊதியம் முறையாக வழங்கப்படாமலிருப்பதாகப் புகாா் கூறப்படுகிறது.
எனவே, தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...