சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது: அன்புமணி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image
அன்புமணி- கோப்பிலிருந்து...
Updated On :26 நவம்பர் 2025, 8:23 pm

Chennai

சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை எதிா்த்து தூய்மைப் பணியாளா்கள் 100 நாள்களைக் கடந்து போராடி வருகின்றனா். அத்துடன் அண்ணா நகா், தண்டையாா்பேட்டை மண்டல தூய்மைப் பணிகளும் தனியாரிடம் வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தூய்மைப் பணியாளா்கள் நலனில் அக்கறையின்றி தனியாரிடம் அந்தப் பணியை அரசு வழங்குவது கண்டிக்கத்தக்கது. மக்கள் வரிப்பணத்தை தனியாருக்கு அளித்து திமுக அரசு தூய்மைப் பணியை மேற்கொள்வது ஏற்கத்தக்கது அல்ல. தனியாரிடம் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரியும் நிலையில், அவா்களுக்குரிய ஊதியம் முறையாக வழங்கப்படாமலிருப்பதாகப் புகாா் கூறப்படுகிறது.

எனவே, தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.