தோ்தல் பிரசாரத்தில் தனது புகைப்படத்தை தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமகவின் பெயா், கட்சிக் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். அன்புமணி சட்டவிரோதமாக பாமக தலைவராக நீடித்து வருகிறாா். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி தா்மபிரபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஏப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது
மாம்பழ சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் மனு நிராகரிப்பு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

பாமக அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணி காரணம் - உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


